Global Warming
உலக வெப்பமயமாதலுக்கு எதிரான கொள்கை இப்போது காற்றில் பறக்கிறது. ஏதோ யாரோ ஆரம்பித்து வைத்தால் அதைப் பிடித்துக்கொண்டு கொஞ்சநாள் போர்க்கொடி தூக்காத குறையாக புரட்சிசெய்கிறோம். பிறகு அதையெல்லாம் மறந்துவிட்டு ஆட்டம்போட ஆரம்பித்துவிடுகிறோம். இந்த அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது.
பாலிதீன் பைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்த்து இந்த அரசாங்கம். கடைகள்தோறும் பாலிதீன் பைகளுக்கு பதிலாக நூற்பைகளும், சாக்கினாலான பைகளும் மற்றும் காகிதப்பைகளும் பயன்படுத்த சிலர் ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் அந்தச்சட்டம் சரியாக மக்களால் மதிக்கப்படாததால் அதன் இழுவையில் இப்போது தொங்கல் விழுந்துள்ளது.
மக்கள் மனதுவைக்காமல் எந்தக்காரியமும் நடக்காது. அதற்கான விழிப்புணர்ச்சியை நலச்சங்கங்கள் மக்களிடையே குறைந்தது ஒரு தலைமுறைக் காலகட்டத்துக்காவது தொடர்ந்து ஏற்றிக்கொண்டேயிருந்தால் ஒழிய நாம் திருந்தமாட்டோம்…
என்ன உங்கள் கருத்து?
Loading...