என் குரல்!
உமக்காக ஒலிக்கிறது

ஒரே கேள்வி?

அணு ஒப்பந்தத்தைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், அதில் சொல்லப்படுகின்ற பிரச்சனைக்குரிய பாகங்கள் என்னவென்று சொல்லி அதற்கு தீர்வையும் கண்டு சொல்லவேண்டிய கடமை தங்களுக்கு உண்டு என்று அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் ஆட்சியில் பங்குகொண்டிருந்தது அனைவரும் அறிந்த உண்மை. இதுவரை பிரச்சனைகள் என்னவாயிருந்தாலும் அங்கு அதற்குக் காரண்மாக இருப்பது கம்யூனிஸ்ட்டுகளாயிருப்பதில் அவர்களுக்கு அவ்வளவு தீரம். எதிர்க்கட்சியான பாரதீய சனதாக் கட்சியே எதிர்க்காத போது இவர்களுக்கு தீரர்கள் என்று காட்டிக்கொள்வதற்கு அது பயன்பட்டிருக்கிறது. இந்தியாவில் கோவை உட்பட பல இடங்களில் தொழிற்சாலைகள் மூடக்காரண்மாயிருந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். ஏதேனும் ஒரு தொழிற்சாலையை இவர்கள் திறந்துவைத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இவர்களைக் “கம்யூனிஸத்தின் சாராம்சம் தெரியுமா?” என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வார்கள். உண்மையான கம்யூனிஸத்தின் பெயரை கீழ்த்தர அரசியலுக்குப்பயன் படுத்திக்கொள்ளும் இவர்களுக்கு எங்கே அது தெரியப்போகிறது?

ஒரே கேள்விதான் கேட்கவேண்டும். அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சியை விட்டே விலகிய இவர்கள், பெங்களூரு, ஆமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கும், சூரத்தில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளுக்கும் இவர்களின் நிலைப்பாடு என்ன? என்ன குரல் கொடுத்தார்கள் இவர்கள். இவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி நிலை பற்றிக்கவலை இல்லை. ஓட்டுக்கள்தான் முக்கியம். இதைப்பற்றிக் கேள்வி எழுப்பினாலே இஸ்லாமியச் சகோதரர்கள் ஓட்டுக்கள் போய்விடவா போகிறது. ஏனிந்த பயம்?

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது கம்யூனிஸ்ட்டுகளின் இரட்டை வேடம் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!

No Responses Yet to “ஒரே கேள்வி?”

Leave a Reply